✅👉வீதியில் நடந்து சென்ற நபரை, மோட்டார் சைக்கிளில் சென்று மோதிக் கொன்றுவிட்டு தப்பியோட்டம்..!

✅👉வீதியில் நடந்து சென்ற நபரை, மோட்டார் சைக்கிளில் சென்று மோதிக் கொன்றுவிட்டு தப்பியோட்டம்..!

✅👉வீதியில் நடந்து சென்ற நபரை, மோட்டார் சைக்கிளில் சென்று மோதிக் கொன்றுவிட்டு தப்பியோட்டம்..! 

வீதியில் நடந்து சென்ற மாற்றுத்திறனாளியான முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர் ஸ்தலத்திலே உயிரிழந்ததையடுத்து, 

மோட்டார் சைக்கிளை செலுத்தியவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு தப்பி ஓடிய சம்பவம் புதன்கிழமை (15) இரவு மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கறுவாக்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய விஜயநாதன் வினோசித் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வாழைச்சேனை கிரான் வீதியிலுள்ள ஜஸ்பக்றரிக்கு அருகாமையிலுள்ள மதுபானசாலை ஒன்றில் இருந்து சம்பவதினமான இரவு 8.30 மணிக்கு வீடு செல்வதற்காக, வீதிக்கு நடந்து வந்த நிலையில், 

வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வீதியில் வீழந்து சம்பவ இடத்திலே உயிரிழந்ததையடுத்து, 

மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் அதனை அங்கு விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை இந்த விபத்தில் உயிரிழந்த முன்னாள் போராளி ஒரு காலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments