✅👉பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்பட உள்ள வாகனங்களுக்கு,
✅👉200% முதல் 300% வரையிலான வரி விதிக்கப்படும்..!
பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி சதவீதத்தை அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிட்டுள்ளது.
அதன்படி, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மிகாமல் உள்ள வாகனங்களாக 200% முதல் 300% வரையிலான வரி விதிக்க குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சில வகை வாகனங்களுக்கு அவற்றின் எஞ்சின் திறன் மற்றும் சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் வரி விதிக்கப்படும் என்று கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
இந்த வரிகள் காரணமாக வாகனங்களின் விலை சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
VAT உட்பட ஏனைய வரிகளும் அமுல்படுத்தப்பட்டால், இந்த அதிகரிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம்” என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரன்சிகே தெரிவித்தார்.
0 Comments