✅👉மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க எதிர்பார்ப்பு..!
எதிர்வரும் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்குத் தைக்கப்பட்ட சீருடைகளை எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
சீருடைக்கான துணிகளை வழங்கும்போது அதில் பெருமளவிலான துணிகள் வீணடிக்கப்படுவதனால் குறித்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 Comments